பெண்களிடம் கொள்ளையடித்து பாலியல் பலாத்காரம்; அந்தரங்க காணொளிகள்; பொலிஸார் பகீர் தகவல்கள்!

Sri Lanka Army Sexual harassment Sri Lanka Police Investigation
By Sulokshi Jul 30, 2024 08:57 AM GMT
Report

 பெண்களை அச்சுறுத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து, தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் இராணுவ சிப்பாய் மற்றும் அதற்கு உதவி செய்த ஒருவரை கெஸ்பேவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சந்தேக நபர் , போலி பொலிஸ் அடையாள அட்டையையும் தயாரித்து பொலிஸ் அதிகாரி போல் நடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்களிடம் கொள்ளையடித்து பாலியல் பலாத்காரம்; அந்தரங்க காணொளிகள்; பொலிஸார் பகீர் தகவல்கள்! | Robbery And Rape Of Women Ex Army Man Arrest

பெண்களை  மிரட்டி பலாத்காரம்

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலைய பெண் ஊழியர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி தனது காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவர் அவரை அழைத்து முச்சக்கர வண்டியில் ஏற்றியுள்ளார்.

முச்சக்கரவண்டியில் ஏறி சிறிது தூரம் சென்ற போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் பொலிஸ் அடையாள அட்டையை காட்டியுள்ளார்.

 

பட்டதாரியான இளம் தாய் பரிதாப உயிரிழப்பு; மருத்துவமனை மெத்தனம் காரணமா?

பட்டதாரியான இளம் தாய் பரிதாப உயிரிழப்பு; மருத்துவமனை மெத்தனம் காரணமா?

இதன்போது, பொலிஸ் அதிகாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர், பெண்ணிடம் தாம் விபச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து அனைத்துத் தகவலையும் கண்டுபிடித்துவிட்டதாக கூறி மிரட்டியுள்ளார்.

பின்னர், அவளை பல்பொருள் அங்காடிக்கு அருகில் அழைத்துச் சென்று, அவள் அணிந்திருந்த நகை, இரண்டு பென்டன்ட்கள் மற்றும் வளையல்களை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர்.

பின்னர் , பெண்ணின் ஏடிஎம் கார்டில் இருந்து 150,000 ரூபாவை எடுத்துக்கொண்டு பிலியந்தலை மொரட்டுவ வீதியிலுள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்களிடம் கொள்ளையடித்து பாலியல் பலாத்காரம்; அந்தரங்க காணொளிகள்; பொலிஸார் பகீர் தகவல்கள்! | Robbery And Rape Of Women Ex Army Man Arrest

அதோடு பெண்ணை விடுதிக்கு அழைத்துச் செல்வது சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் பிலியந்தலை நகருக்கு அழைத்து வந்து வேறு முச்சக்கரவண்டியில் அனுப்பி வைக்கப்பட்டார்.

கையடக்க  தொலைபேசியில்  அந்தரங்க  காணொளிகள்

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கடந்த 15ஆம் திகதி கெஸ்பேவ பொலிஸில் சந்தேகநபர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாண புகைப்படங்களை எடுத்ததாக முறைப்பாடு செய்திருந்தார்.

அவர் வழங்கிய முச்சக்கர வண்டியின் பதிவு இலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், முச்சக்கரவண்டியின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. விசாரணைகளுக்கு அமைய, படுவந்தர, லுல்வல பிரதேசத்தில் வைத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை பொலிஸாரால் கைது செய்தனர்.

பெண்களிடம் கொள்ளையடித்து பாலியல் பலாத்காரம்; அந்தரங்க காணொளிகள்; பொலிஸார் பகீர் தகவல்கள்! | Robbery And Rape Of Women Ex Army Man Arrest

கைதான பிரதான சந்தேகநபர் முன்னாள் இராணுவ வீரரான சந்தேக நபர் 57 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையாவார். போலி பொலிஸ் அடையாள அட்டை, ஐஸ் போதைப்பொருள், நடிகை உட்பட 5 பெண்களின் தேசிய அடையாள அட்டை, ஆண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, 18 சிம் அட்டைகள், 5 ஸ்மார்ட் கைப்பேசிகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகநபருக்கு உதவி புரிந்த முச்சக்கரவண்டி சாரதியும் முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச பேருந்தில் நடத்துனரின் மோசமான செயல்; கணவன் மனைவிமீது தாக்குதல்!

அரச பேருந்தில் நடத்துனரின் மோசமான செயல்; கணவன் மனைவிமீது தாக்குதல்!

ஒரு வருடத்திற்கு முன்னர் தனது கடமை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிலைய பொறுப்பதிகாரி பிரியங்க சில்வாவின் புகைப்படத்தை சந்தேக நபர் போலி பொலிஸ் அடையாள அட்டைக்காக பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் கைப்பேசியை பரிசோதித்த போது, ​​ஆடைத் தொழிலாளி மற்றும் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட காணொளி காட்சிகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் போல் நடித்து பெண்களை ஏமாற்றி மிரட்டி தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.

வெளிநாட்டு வாழ் யாழ்ப்பாண தம்பதியை ஏமாற்றி மோசடி; நில அளவையாளர் உள்ளிட்ட மூவருக்கு நேர்ந்த கதி!

வெளிநாட்டு வாழ் யாழ்ப்பாண தம்பதியை ஏமாற்றி மோசடி; நில அளவையாளர் உள்ளிட்ட மூவருக்கு நேர்ந்த கதி!

அதோடு தாம் கொள்ளையடிக்கும் பணத்தை நடிகைகள் மற்றும் அழகான பெண்களை வைத்துச் செலவு செய்வதாகவும், அவர்களுடனான தனது உடலுறவை கையடக்கத் தொலைபேசியில் படம்பிடிப்பதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் கெஸ்பேவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளாது. இந்நிலையில் சந்தேகநபரின் மோசடிகளில் சிக்கியவர்கள் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US