கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரிடம் காணப்படும் ஆபத்து !
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பெண்களுக்கு, மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் சில பாதிப்புகளைக் கொண்ட நீண்டகால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தலவலை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். அத்துடன் இந்த நோய் அறிகுறிகள் பெண்களுக்கு மட்டும்ல்லாது ஆண்களுக்கும் ஏற்படலாம் எனவும் அவர் கூறினார்.
மேலும் இந்த நோய் அறிகுறிகளில், மன அழுத்தம் சுமார் 15 வீதம் உயர்வாக காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.. இதேவேளை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுபோன்ற 9 அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
1. இயல்பற்ற சுவாசம் 8%
2. வயிறு சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகள் 8%
3. மன அழுத்தம் 15%
4. மார்பு மற்றும் தொண்டை வலி 6%
5. அறிவாற்றல் பிரச்சினைகள் 4%
6. சோர்வு 5%
7. தலைவலி 5%
8. தசை தொடர்பான வலி 5%
9. மற்றும் பிற உபாதைகள் 7%
என்பனவே இவ்வாறு அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் இந்த நாள்பட்ட கொவிட் நோய் அறிகுறிகள் நவீன மருத்துவத்திற்கு ஒரு சவாலாக இருக்கலாம் என்று விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர ட்விட்டர் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.