யாழில் தொடரும் அபாயம்; மேலும் 151 பேருக்கு தொற்று; நால்வர் பலி!
யாழ்.மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் நால்வர் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விடயம் மாவட்டத்தின் கொரோனா அனர்த்த நிலைமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் தொிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 27 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனைகளில் 124 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
அதேவேளை மாவட்டத்தில் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை 348 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.
மேலும் யாழ் மாவட்டத்தில் 15475 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.