பிரித்தானியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் எண்ணிக்கை!
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவால் (Covid-19) 40,375 பேர் பாதிக்கப்பட்டதோடு 145 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 94 இலட்சத்து 87 ஆயிரத்து 302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 42ஆயிரத்து 678 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 15இலட்சத்து 85ஆயிரத்து 999 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 999 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 29,313 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 77 இலட்சத்து 58 ஆயிரத்து 625 ஆக அதிகரித்துள்ளது.