பூஸா முகாமா ரிக்ஷாட் வீடு? மற்றுமொரு பெண் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதியின் வீட்டில் மலையக சிறுமி ஹிக்ஷாலினி உயிரிழந்தமை தொடர்பில் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு பணிப்பெண்ணாக சேவை செய்யும் போது, சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மற்றுமொரு சிறுமி பொலிஸ் விசாரணையின் போது கண்ணீருடன் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஏனைய 11 பெண்களில் ஒரு சிறுமியே இவ்வாறு பொலிஸாரிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.
ரிஷாட் பதியூதினின் வீட்டின் கழிப்பறையை சரியான முறையில் கழுவவில்லை என்றால் அவரது மனைவி எங்கள் முகத்தை கழிப்பறை கொமட்டிற்குள் அமுக்கி அழுக்கு நீரில் குளிப்பாட்டிவிடுவார் எனவும் அச்சிறுமி கூறியுள்ளார்.
அத்துடன் சாப்பிட்டு முடித்த பின்னர் தட்டுகளை சரியாக கழுவவில்லை என்றால் அதில் இருக்கும் அழுக்கு நீரை முகத்தில் வீசுவார் என பாதிக்கப்பட்ட சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
ரிஷாட் பதியூதினின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பணிப் பெண்கள் அனைவரையும் சித்திரவதைக்குட்படுத்தி மோசமான முறையில் தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சில சந்தர்ப்பங்களில் துடைப்பக் கட்டை உடையும் வரை தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் உயிரிழந்த சிறுமி ஹிக்ஷாலினி தங்கியிருந்த அறையில் இருந்து சந்தேகத்திற்கிடமான பல பொருட்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாகவும் திவயின மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.