எரிபொருள் விலை திருத்தம் தொடர்பிலான தீர்மானம்
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், இம்மாதம் 30ஆம் திகதி இரவு, எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அவரது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது குறிப்பில் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த மே மாதம் 31ம் திகதி எரிபொருள் விலையில் கடைசி திருத்தம் செய்யப்பட்டது.
அந்த திருத்ததில் மூன்று வகையான எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டதுடன், இரண்டின் விலையில் மாற்றம் இல்லை.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் விலை 355 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, அதன் விலை 420 ரூபாவாக பதிவாகியுள்ளது.
டீசல் லீற்றர் ஒன்றின் விலை 16 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் அதன் விலை 317 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதன்படி, CPC இன் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், CPC இன் சுத்திகரிப்பு நிலையமானது, எரிபொருளின் தரம், செயல்திறன், திறன் மற்றும் செலவுக் குறைப்பு ஆகியவற்றில் முதலீட்டை ஈர்க்கவும் அதிகரிக்கவும் ஒரு தனி அரசாங்கத்திற்கு சொந்தமான மற்றும் இயக்கப்படும் சுத்திகரிப்பு நிலையமாக இருக்கும். நிறுவனமாக நிறுவப்படும் என குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.