நேபாளத்தில் 10 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீனர் உயிருடன் மீட்பு
நேபாளத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவையடுத்து சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இமாலய பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி நிகழ்ந்த பனிப்பாறை சரிவு வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு காரணமாக 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 5,600 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

இதற்கிடையில், திரிசூலி நதிக்கரையில் அமைந்துள்ள நீர்த்தேக்கச் சுரங்கப்பாதையிலிருந்து சீன நபர் ஒருவர் மீட்கப்பட்டதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இதே சுரங்கத்திலிருந்து நேற்று முன்தினம் இரண்டு நேபாளிகள் வியத்தகு முறையில் உயிருடன் மீட்கப்பட்டிருந்தனர்.
ஆற்றின் மேல் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு காரணமாக, ஆறு நீர்வழங்கல் திட்டங்களுடன் தொடர்புடைய சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் வரை சிக்கியிருக்கலாம் என மீட்புப் பணியாளர்கள் நம்புகின்றனர்.