காணாமல்போன பாடசாலை மாணவிகள் மூவர் விடுதிகளில் மீட்பு; நடந்தது என்ன?
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேட்வெஸ்டர்ன் தோட்டத்தின் லூசா பிரிவில் கடந்த மாதம் (14) முதல் காணாமல்போயிருந்தனர். அது தொடர்பில் பெற்றோரார் தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மூன்று பாடசாலை மாணவிகளும் காலி மீட்டியாகொடை பகுதியில் உள்ள தங்குமிட விடுதியொன்றில் இருந்து நேற்று (04) பொலிஸாரால் பொறுப்பேறக்கப்பட்டுள்ளனர்.
வேலைதேடி வெளியேறிய மாணவர்கள்
இவர்கள் நால்வரும் மீட்டியகொடை பிரதேசத்தில் உள்ள கறுவாப் பட்டை பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் சென்றுள்ளதாகவும், இவர்கள் 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் தொழிற்சாலையின் கட்டுப்பாட்டு அதிகார சபை அவர்களை வேலைக்கு அமர்த்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போன நான்கு மாணவர்களின் உறவினர் ஒருவர் இலவங்கப்பட்டை தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மாணவிகள் அவரைக் தேடி இவர்கள் அந்த தொழிற்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒருமாதமாக மாயமான மாணவர்கள்
எனினும் வேலை கிடைக்காததால் நால்வரும் சுமார் ஒரு மாதமாக தொழிற்சாலைக்கு சொந்தமான தங்குமிட விடுதியில் தங்கியுள்ளனர்.
தலவாக்கலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, அவர்களிடம் இருந்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டதன் மூலம் மூன்று மாணவிகள் மற்றும் மாணவர்களின் மறைவிடத்தை அடையாளம் காண முடிந்ததுள்ளது.
அதன்படி, நான்கு பேரும் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை வீட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று மாணவர்களும் மாணவியும் வீட்டை விட்டு ஓடியதாக அத்தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.