கிணற்றில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு, கொக்குவில் பாலமீன்மடு பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து வயோதிபபெண் ஒருவர், இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த 79 வயதுடைய வள்ளித்தங்கம் கந்தசாமி என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனிமையில் வசித்துவந்த வயோதிபப்பெணின் பிள்ளைகள், இன்று காலை அங்கு சென்றபோது தாயாரை காணாது தேடியுள்ளனர்.
இதன்போது, அவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் இருப்தை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒபு;படைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.