மின்வெட்டு தொடர்பில் பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!
நாட்டில் உயர்தரப் பரீட்சை நடைபெறும் 26-01- 2023 திகதி முதல் 17-02-2023 திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்வெட்டுக்கான ஒப்புதல் வழங்கவில்லை என குறித்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஒப்புதல் வழங்காத மின்வெட்டுக்கு பாவனையாளர்கள் முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் - 0775687387
மின்னஞ்சல் - consumers@pucsl.gov.lk
தொலைநகல் 0112392641