ஊரடங்கை நீக்கவேண்டுமெனில் அறிக்கை வழங்குங்கள்; ஜனாதிபதி பணிப்புரை
செப்டம்பர் 21 க்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டுமானால், எந்த வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்திலேயே ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்த்தாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதன்போது, மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் இராணுவத்தளபதி கூறினார்.
அத்தோடு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் இதன்போது பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டார்.