19 ஆம் திகதி குறித்து மற்றுமொரு முக்கிய அறிவிப்பு!
அரச பொது விடுமுறையாக எதிர்வரும் 19 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான மற்றும் பிரதேச அலுவலகங்கள் திறந்திருக்கும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஒருநாள் மற்றும் வழமையான சேவையின் கீழ் கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முன்கூட்டிய பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு மாத்திரமே எதிர்வரும் 19 ஆம் திகதி சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டிய பதிவுகளை மேற்கொள்ளாதவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி அலுவலகத்திற்கு வருகை தர வேண்டாம் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.