யாழ் கூலிப்படைக்கு கனடாவிலிருந்து அனுப்பபட்ட பணம்; இடம்பெற்ற வன்முறை!
யாழ்.பனிப்புலம் ஐயப்பன் கோவிலடியில் கடந்த மாதம் 26ம் திகதி ஒருவர் மீது வாளால் வெட்டி காயப்படுத்தி அவரது காரையும் சேதப்படுத்தி தப்பிச் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் வெளிவந்த தகவல்
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் கனடா நாட்டிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் அனுப்பப்பட்டு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் பனிப்புலம் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவஎந்துள்ளது.
மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து வாள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.