யாழ் மாவட்ட அலுவலகத்தில் சம்பந்தனுக்கு நினைவேந்தல்
இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் மறைந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்வில் பொதுச்சடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகச் செயலாளர் S.குலநாயகம் யாழ் மாநகர சபை முன்னாள் மேயர் இமானுவேல் ஆர்னால்ட் உள்ளிட்ட கட்சயின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்
இலங்கை தமிழ் அரசியலில் மூத்த அரசியல்வாதியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாளர் தலைவரான இராசவரோதயம் சம்பந்தனின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று பிற்பகல் 5 மணியளவில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கும், யுத்தத்தில் மரணித்த மக்களுக்காகவும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் ஈகைச் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டது.
ஈகைச் சுடர்களினை முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம், சந்திரலிங்கம் சுகிர்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி உறுப்பினர்கள் உட்பட பலரும் ஏற்றியதை தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் கொடி துக்கத்தை அனுஸ்டிக்கும் முகமாக அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வடமராட்சி. பகுதிக்குட்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.