மூன்று பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கை வரிசை ; நகைக்காக அரங்கேற்றபட்ட சம்பவம்
17 இலட்சம் ரூபா விற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொள்ளைச் சம்பவம்
குறித்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அநுராதபுரம் பண்டுளகம பகுதியில் வைத்து கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய சாலியவெவ பகுதியைச் சேர்ந்தவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
கடந்த 02 ஆம் திகதி இரவு, அநுராதபுர பேருந்து நிலையத்திலிருந்து கொழும்புக்கு செல்லும் பேருந்தில் குறுகிய தூரம் பயணம் செய்து கொண்டிருந்த மூன்று பெண்களுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்தில் அவர்களுக்கு சிற்றுண்டியும் பானமும் வழங்கியுள்ளார்.
அப்போது, அந்த மூன்று பெண்களும் மயங்கி விழுந்துள்ள நிலையில் மேலும், அடையாளம் தெரியாத அந்த நபர், பெண்களிடமிருந்து 17,06,400/= மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்க நகைகளைத் திருடிவிட்டுச் சென்றதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையிலேயே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.