யாழில் தீச்சட்டி ஏந்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் தீச்சட்டி ஏந்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போரட்டம் நடத்தியுள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பேரணி
யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் இன்று (30) காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி - ஆஸ்பத்திரி வீதி - காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்தது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பேரணி இடம்பெற்றது.
இதன்போது பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.