அரசியல் விவாத விமர்சனம் ; உதயநிதியை கிழித்து தொங்கவிட்ட சமூக வலைத்தள பயனாளி!
தமிழ் நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசிய "உங்க அப்பாவைக் காணோம்" குட்டிக்கதை மற்றும் "டாஸ்மாக் பார்ட்டி ஃபண்ட்" குற்றச்சாட்டுகள் திமுக தரப்பை நிலைகுலைய வைத்துள்ளன.
முதலமைச்சர் விஜய் குற்றசாட்டுக்களுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி வரும் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் விவாதங்களை விமர்சித்து, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலத்த கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அறிவாலயத்தை மூடிவிட்டு துபாய் செல்....
அந்த வகையில், பிரபல சமூக வலைத்தள பயனர் சோனியா அருண்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலினை மிக கடுமையாகச் சாடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "தன்னுடைய சொந்த அப்பா மற்றும் தனது கட்சியின் தலைவரான ஒருத்தரையே தேர்தலில் ஜெயிக்க வைக்க துப்பில்லாத உதவாநிதி..." என்று உதயநிதியை அவர் வம்புக்கு இழுத்துள்ளார்.
]
மேலும், "சட்டமன்றத்தில் முதலமைச்சர் பார்ட்டி ஃபண்ட் என்று சொன்னவுடன், அதற்கு பதில் சொல்ல தெரியாமல் செங்கல்பட்டு என்றும், கணவன் என்றும், மனைவி என்றும் கூறியுள்ளார்.
இதற்கு மேல் யாராவது இவர்களது பழைய பால்டாயில் கதையை எல்லாம் பேச ஆரம்பித்தால் மொத்தமாக நாறிவிடும். ஒழுங்காக அரசியல் விமர்சனம் செய்தோமா, மக்கள் பிரச்சினையை பேசினோமா என்று இருக்க வேண்டும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் இப்படியே தொடர்ந்து உளறிக்கொண்டு இருந்தால் திமுகவுக்கு நிரந்தரமாக மூடுவிழா தான் என்றும், அறிவாலயத்தை மொத்தமாக மூடிவிட்டு துபாய் பக்கம் போய் செட்டில் ஆக வேண்டியதுதான் என்றும் உதயநிதி ஸ்டாலினை மிக கடுமையாகச் சாடி அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.