ஜனாதிபதி வேட்பாளரின் செலவு வரம்பு தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகும் வேட்பாளரின் செலவு வரம்பு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான விசேட சுற்றுநிருபத்தை எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேவையான அறிவுறுத்தல்கள் குறித்த விசேட சுற்றுநிருபத்தில் அடங்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, அந்த விசேட சுற்றுநிருபம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அது வர்த்தமானி ஊடாக வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.