நாட்டின் 16 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
நாட்டில்16 மாவட்டங்களுக்கு நவம்பர் 29 ஆம் திகதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் மற்றும் வடமாகாணத்தில் 04 மாவட்டங்கள் தவிர, மன்னார் உட்பட ஏனைய 16 மாவட்டங்களுக்கும் சிவப்பு அபாய எச்சரிக்கையை திணைக்களம் விடுத்துள்ளது.
இதனையடுத்து இந்த காணாமலையில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுதுளைத்து.