சதுப்பு நிலத்தில் இருந்து உடல் உறுப்புகள் மீட்பு! வெளியான அதிர்ச்சித் தகவல்!
பமுனுகம, நீலசிரிகம பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் காணாமல் போன நபருடன் கடைசியாக தொடர்பில் இருந்த நபரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இதன்போது விசாரணையில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி அந்த நபரை கொன்றது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் நீலசிறிகம சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் அந்த இடத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.