கிரிகரி வாவியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரகரி வாவியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் இன்றைய தினம் (16-02-2023) மாலை 03.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
கிரிகரி வாவியில் சடலம் ஒன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் நுவரெலியா பொலிஸருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.
சடலம் உருக்குலைந்த நிலையில் இருப்பதன் காரணமாக ஆணா அல்லது பெண்ணா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா? எவராவது கொலை செய்து வாவியில் எரிந்து சென்றார்களா? என்பது தொடர்பாக பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.