வீடொன்றில் இருந்து இளம் ஜோடியின் சடலங்கள் மீட்பு
மீரிகம, லிந்தர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளம் ஜோடியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
26 வயதான கணவர் மற்றும் 23 வயதான மனைவியுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்த நிலையில் கழுத்தில் சேலையால் சுருக்கிடப்பட்டிருந்ததுடன் அதே சேலையின் மறு முனையில் கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை தமது 4 வயது மகனை கவனித்துக் கொள்வது குறித்து சகோதரரிற்கு எழுதிய சிறிய குறிப்பும் காணப்பட்டது. ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் உயிரிழந்த ஜோடிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இறந்த இளம் பெண்ணின் சகோதரரின் திருமணத்திற்காக குடும்பம் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் குறித்த பெண் மட்டும் வீட்டில் இருந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் திருமணத்திற்கு சென்ற கணவர், தனது 4 வயது மகனை அங்கே ஒப்படைத்து விட்டு வீடு திரும்பியதாகவும் கூறப்படுவதுடன் அந்த வீட்டிலிருந்து அவலக்குரல் கேட்பதாக , அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் சடலங்களை மீட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.