இலங்கையில் வரலாறு காணாத உயர்வை பதிவுசெய்த நோயாளிகள்!
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தை இலங்கை தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் அடையாளம்
வெளியான தகவல்களின்படி இவ்வருடத்தின் கடந்த சில நாட்களில் 4,387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அவர்களில் 32.5 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 20,334 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை , டெங்கு நோயினால் 145 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது பதிவாகும் காய்ச்சலின் அறிகுறிகளும் டெங்குவின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒத்திருப்பதால், நோயின் நிலையைத் தீர்மானிக்காமல் உட்கொள்ளும் மருந்துகளால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.