22வது திருத்தம் தொடர்பில் சாதனை அளவாக உயர் நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சாதனை அளவாக 67 விசேட தீர்மான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் வரலாற்றில் ஒரு அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று (1) முற்பகல் 10 மணிக்கு உயர் நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தச் சட்டமூலம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அரசியலமைப்புக்கு முரணானதா என்பதையும் அவ்வாறாயின் நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் சேர்த்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற வேண்டுமா என்பதையும் இந்த உயர்நீதிமன்ற அமர்வு ஆராய்ந்து அறிவிக்கும்.