ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் விராட் கோலி
நடப்பு ஐபிஎல் சீசனுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான விடியோவில் இதுபற்றி விராட் கோலி கூறியது:
"அணியினரிடம் இன்று மாலை பேசினேன். ஐபிஎல் இரண்டாம் பகுதி தொடங்குவதற்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். ஆர்சிபி கேப்டனாக இதுவே எனது கடைசி ஐபிஎல். அணி நிர்வாகத்தினரிடம் மாலை பேசினேன்.
கொஞ்ச நாள்களாகவே இது என மனதில் இருந்து வந்தது.
பணிச் சுமையைக் குறைப்பதற்காக டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தேன்.
ஆர்சிபியைத் தவிர வேறு எந்தவொரு அணியிலும் விளையாடுவதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதை அணி நிர்வாகத்திடம் தெளிவுபடுத்திவிட்டேன். கடைசி ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடும் வரை ஆர்சிபி வீரராகவே இருக்க விரும்புகிறேன்."