பட்டலந்த சித்திரவதை முகாம் குறித்து உண்மையை உடைத்த ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Government Batalanda commission Report
By Viro Mar 16, 2025 11:34 AM GMT
Viro

Viro

Report

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான கருத்துகளை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

பட்டலந்த அறிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் எழுப்பப்பட்ட நிலையில் இன்று (16) விசேட உரையொன்றை ஆற்றி பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை தான்  நிராகரிப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

பட்டலந்த சித்திரவதை முகாம் குறித்து உண்மையை உடைத்த ரணில் | Ranil Opens Up About Patalanda Torture Camp

 பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கையில் 1988-90 காலகட்டத்தில் ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாத செயல்கள் குறித்தே குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை 

"இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானதன்  பின்னர், ஜே.வி.பி நாடு முழுவதும் பயங்கரவாதத்தை பரப்ப நடவடிக்கை எடுத்தது. அந்த நேரத்தில், நாட்டின் முக்கிய இடங்களைப் பாதுகாக்கும் அதிகாரம் அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவால் அமைச்சரவை அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


பியகம பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், டீசல் மின் உற்பத்தி நிலையம், மகாவலியிலிருந்து கொழும்புக்கு மின்சாரம் வழங்கும் மையம் மற்றும் வணிக வலயம் போன்ற பல பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருந்தன. அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிசாரும், இராணுத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினர் தங்கியிருப்பதற்காக பட்டலந்தையில், லங்கா உர உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான பல கைவிடப்பட்ட கட்டிடங்கள் காணப்பட்டது. கைவிடப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வீடுகளை பாதுகாப்புப் படையினருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில், இலங்கை மின்சார சபையின் பல அதிகாரிகள் ஏற்கனவே அந்த வீடுகளில் பலவற்றில் வசித்து வந்தனர்.

இந்த பயங்கரவாத காலகட்டத்தில், சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கொல்லப்பட்டார். அந்த நேரத்தில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன என்னை அழைத்து, இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வீட்டு திட்டத்தில் உள்ள வெற்றிடமான வீடுகளை அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, அப்போதைய கலைப்பாளர், சம்பந்தப்பட்ட வீடுகளை களனி பொலிஸ் கண்காணிப்பாளர் நலின் தெல்கொடவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.

இந்தக் காலகட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் ஒருவர், கூட்டுறவு சபை உறுப்பினர் ஒருவர், ஒரு பொலிஸ் சார்ஜன்ட் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டனர். அதே நேரத்தில், மற்றொரு மாகாண சபை உறுப்பினரின் வீடும் தாக்கப்பட்டது.

வீழ்ச்சியடைந்த மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டில் அமைதியையும் தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்ய அதிகாரத்தில் இருந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பட்டலந்த பகுதியில் சித்திரவதைக் கூடம் இருந்ததா? என்பதை விசாரிக்க சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு ஆணைக்கழுவை அமைத்தார். அதற்குப் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். நான் அங்கு சாட்சியாக மட்டுமே அழைக்கப்பட்டேன். அந்த நேரத்தில், நான் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

பட்டலந்த சித்திரவதை முகாம் குறித்து உண்மையை உடைத்த ரணில் | Ranil Opens Up About Patalanda Torture Camp

முழுமையான அரசியல் அவதூறு பிரச்சாரத்தை நோக்கமாகக் கொண்டு பட்டலந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதன்போது ஒரு அமைச்சர் என்ற வகையில் பட்டலந்தை வீட்டுத் தொகுதியில் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு நேரடியாக வீடுகளை வழங்கியது தவறு என்று குறிப்பிடப்பட்டது.

பொலிஸ் மா அதிபர் ஊடாக அதனை வழங்கியிருக்கலாம் என்பதே ஆணைக்குழுவின் நிலைப்பாடு. வேறு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து விடயங்களும் எனக்குப் பொருந்தாது. 

ஆணைக்குழுவின் அறிக்கையின் 3 ஆம் அத்தியாயம், ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாதச் செயல்களை பற்றியே விரிவாக விவரிக்கிறது. முழு வரலாறும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைத் தவிர, வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் நான் பொறுப்பாக மாட்டேன். அந்த அறிக்கையை நான் முழுமையாக நிராகரிக்கிறேன்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை மறைத்ததாக யாரும் குற்றம் சாட்ட முடியாது. இது 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றக் கூட்டத்தொடராக நடத்தப்பட்டது. ஆனால் யாரும் அதைப் பற்றி விவாதிக்கக் கோரவில்லை. குறைந்தபட்சம் ஜே.வி.பி. அப்படி ஒரு கோரிக்கையை வைக்கவில்லை. பலர் அந்த அறிக்கையை ஏற்கவில்லை. எனவே, பாராளுமன்றத்தில் அதைப் பற்றி விவாதிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆட்சிக்கு வந்த எந்த அரசியல் கட்சியும் இந்த அறிக்கையின் மூலம் குறுகிய அரசியல் ஆதாயங்களைப் பெற முயற்சிக்கவில்லை என்று சொல்ல வேண்டும். அதே போன்று நாடாளுமன்ற அமர்வொன்றின் அறிக்கை குறித்து 25 வருடங்களின் பின்னர் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்தும் சம்பிரதாயம் இதுவரை நம் நாட்டில் இருக்கவில்லை. எனவும் குறிப்பிட்டுள்ளார்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, Morden, United Kingdom

29 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US