இலங்கை அரசியல் வரலாற்றில் ரணிலின் சாதனைப் பட்டியல்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின், தனது கல்வி மற்றும் அரசியல் பயணத்தில் பல்வேறு முக்கியமான சாதனைகளை மேற்கொண்டுள்ளார் என்ற ஆதரவாளர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
அவர் மேற்கொண்ட சாதனைகள் குறித்து விரிவான பட்டயலை இங்கு காணலாம்.
1) க.பொ.த (உ/த) GCE (AL) தேர்வில் இலங்கையில் 02ம் இடம்.
2) க.பொ.த (சா/த) GCE (OL) தேர்வில் இலங்கையில் 07வது இடம்.
3) கொழும்பு ரோயல் கல்லூரி விவாதக்குழு மற்றும் நாடகக் குழுவின் தலைவர்.
4) இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது பரிஸ்டர் பட்டம் பெற்றவர்.
5) லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான முதுகலைப்பட்டம் வென்றவர்.
6) 15 வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய உலகின் ஒரே மனிதர்.
7) ஜப்பான் பாராளுமன்றத்தில் ஜப்பான் மொழியில் உரையாற்றிய உலகின் ஒரே ஒரு வெளிநாட்டு அரச தலைவர்.
8) இலங்கையின் வயது குறைந்த முதலாவது அமைச்சர்.
9) உலகின் கல்விஅறிவு உள்ள அமைச்சர்களுக்காக வழங்கப்படும் “பிலென் டி ஒர் “ விருதை இரண்டு தடவைகள் பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல்வாதி.
10) 1989 இல் “ நொபெல் “ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது இலங்கையர்.
11) இலங்கைக்கு இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியவர்.
12) இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தியவர்.
13) இளைஞர் சேவைகள் கழகத்தைத் தொடங்கியவர்.
14) அற-நெறிக் கல்விக்கு வித்திட்டவர்.
15) கல்வியற் கல்லூரிகளைத் தொடங்கியவர் (COLLEGE OF EDUCATION)
16) இலங்கையில் அதிக தடவைகள் பிரதமராக இருந்தவர்.
17) போட்டித்தேர்வு மூலம் ஆசிரியர் நியமனம் வழங்குவதைத் தொடங்கியவர்.
18) ஒரே தடவையில் அரச ஊதியம் 10000/-ரூபா உயர்த்தியவர்.
19) இலங்கைக்கு முதன்முதலில் கையடக்கத் தொலைபேசி சேவையை (CELL TEL LANKA) கொண்டு வந்தவர்.