நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையை வழங்கவுள்ள ரணில்!
கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (02) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, உடன்படிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிரதமரின் வேண்டுகோளின்படி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 2024 ஜூலை 2 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு விசேட நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளுமாறு எழுத்து மூலம் அறிவித்தார்.