மின்கட்டண குறைப்புக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது ரணில் ; அஜித் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lankan Peoples Sri Lanka Electricity Prices Election
By Sahana Jan 12, 2025 09:03 PM GMT
Sahana

Sahana

Report

நாட்டின் துரதிஷ்டத்தால் தான் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார். நாட்டு மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள். ரணிலின் புண்ணியத்தால் நாட்டை நிர்வகிக்கும் உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்த புதிய திட்டம்

குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்த புதிய திட்டம்

மின்கட்டணத்தை குறைப்பதற்கான சாதகமான சூழலையே ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தினார் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, சொல்வது இலகு, செயற்படுவது கடினம் என்பதை தற்போதைய அரசாங்கம் உண்மை என்று நிரூபித்துள்ளது. தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார்.

மின்கட்டண குறைப்புக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது ரணில் ; அஜித் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு | Ranil Environment Electricity Tariff Ajith Rajapa

அதேபோல் 75 ஆண்டுகால அரசியலை சாபம் என்று விமர்சித்து நாட்டுக்காக சேவையாற்றிய அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்பை தோற்றுவித்தார். தேசிய மக்கள் சக்தியின் போலியான வாக்குறுதி மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

தேர்தல் வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தி வழங்கிய நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளது. பொருளாதார மீட்சிக்கு அரசாங்கத்திடம் சிறந்த திட்டங்கள் ஏதும் கிடையாது.

ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கைகள் நாட்டுக்கு எதிரானது என்று விமர்சித்த தேசிய மக்கள் சக்தி இன்று அவரது கொள்ளைகளை அச்சொட்டாக அமுல்படுத்துகிறது. நாட்டின் துரதிஸ்டத்தின் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார்.

மின்கட்டண குறைப்புக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது ரணில் ; அஜித் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு | Ranil Environment Electricity Tariff Ajith Rajapa

2020 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்து வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் டொலர் என்ற நிலைக்கு சென்ற நாட்டை, இரண்டாண்டுக்குள் காப்பாற்றி வெளிநாட்டு கையிருப்பை 6000 பில்லியன் டொலர் வரை நிலைப்படுத்தினார்.

நாட்டு மக்களும் அறிவுபூர்வமாக சிந்திக்கவில்லை. வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி அரசியல் தீர்மானத்தை எடுத்தார்கள் இன்று அது மக்களுக்கே எதிரானதாக திரும்பியுள்ளது.

ரணிலின் புண்ணியத்தால் நாட்டை நிர்வகிக்கும் உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உண்மையை ஜனாதிபதியும், அரசாங்கமும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை. அரிசி உற்பத்தியாளர்களிடம் அரசாங்கம் முழுமையாக அடிபணிந்துள்ளது. மின்கட்டணத்தை குறைப்பதாக வாக்குறுதியளிக்கவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவி விலக இணக்கம்

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவி விலக இணக்கம்

பொய்யுரைப்பதையே இந்த அரசாங்கம் பிரதான கொள்கையாக கொண்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த நவம்பர் மாதம் தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் மின்கட்டணத்தை குறைப்பதாக வாக்குறுதியளித்தார்.

மின்கட்டணத்தை குறைப்பதற்கான சாதகமான சூழலையே ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தினார். எமது அரசாங்கம் இன்று ஆட்சியில் இருந்திருந்தால் மின்கட்டணம் இரண்டு தடவைகள் குறைக்கப்பட்டிருக்கும்.

வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளை பெற்று அரசாங்கம் நாட்டை நிர்வகிக்கலாம் என்றார்.

கார் ஓட்டப் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணிக்கு மூன்றாவது இடம்

கார் ஓட்டப் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணிக்கு மூன்றாவது இடம்

10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US