ரம்புக்கனை சம்பவம் ; நீதிமன்றம் விடுத்த உத்தரவு
ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன மற்றும் ஏனைய அதிகாரிகளை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை , கேகாலை நீதவான் பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் அந்த உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் ஜூன் 27ஆம் திகதி தமது சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு தற்போது உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கீ பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.