மதுக்கடைகள் திறப்புக்கு சமாதி ராஜபக்க்ஷ கடும் எதிர்ப்பு
நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை, புகையிலை மற்றும் மது மீதான தேசிய அதிகாரசபை கண்டித்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் சமாதி ராஜபக்க்ஷ.
இந்த தொற்றுநோய் காலத்தில் மது அருந்துவதையும் புகைப்பிடிப்பதையும் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பலமுறை மக்களுக்கு அறிவுறுத்தும்போது, மதுக்கடைகள் அருகே மக்கள் கூடி வருவது மிகவும் பரிதாபகரமானது என்றார். “இது வருத்தமாக இருக்கிறது. மதுவுக்கு எதிரான இயக்கத்தை வழிநடத்தின அனாகரிக தர்மபாலாவின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று மாலை 4.00 மணியளவில் நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் விற்பனை நிலைய உரிமையாளர்களை தங்கள் கடைகளைத் திறக்குமாறு சில அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது“ என்றார்.
“அனுராதபுரத்திற்கு நான் செல்லும் போது, எந்தவொரு சுகாதார விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் ஏராளமான மக்கள் மதுபானக் கடைகளுக்கு விரைந்து செல்வதையும், மதுபானங்களை வாங்க எந்த சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காமல் நீண்ட வரிசையில் நிற்பதையும் கவனித்தேன்,” என்று அவர் கூறினார்.
மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட சமயத்தில் இது குறித்து அனுராதபுரம் காவல்துறை தலைமையகத்திற்கு தகவல் கொடுத்ததாகவும், ஆனால், இது உயர் அதிகாரிகளின் உத்தரவு என்று தகவல் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
ஆனால் உத்தரவிட்டவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. “பின்னர் நான் மதுவரி திணைக்கள ஆணையாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு இந்த விஷயம் குறித்து தெரிவித்தேன். அவரைப் பொறுத்தவரை அவருக்கும் மதுக்கடைகளைத் திறப்பதற்கான அத்தகைய உத்தரவு தெரியாது” என்று அவர் கூறினார்.
மது அருந்துதல் மற்றும் சிகரெட் புகைத்தல் பயனர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது என்றும் மேலும் கோவிட் வைரஸால் எளிதில் பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, சிகரெட் மற்றும் மது நிச்சயமாக ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது, வைரஸ் எளிதில் உடலில் நுழைய உதவுகிறது என்றார். சுகாதார நிலைமை ஆபத்தில் உள்ளதால், சரியான முடிவுகளளை எடுக்கும்படி அரசாங்கத்தின் பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.