குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம் ; இந்த ராசிக்களுக்கு ஜாக்பாட் அடிக்க காத்திருக்கு
ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். குரு பகவான் தற்போது புதனின் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் ஜூன் 02 ஆம் தேதி வரை இருந்து, பின் கடக ராசிக்குள் நுழைவார்.
இந்நிலையில் குரு பகவான் ஏப்ரல் முதல் வாரத்தில், அதுவும் ஏப்ரல் 03 ஆம் திகதி புதனுடன் சேர்ந்து ஒரு ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த நவபஞ்சம ராஜயோகம் உருவாகும் போது 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

பலன் பெறும் ராசிக்காரர்கள்
ரிஷபம்: குரு புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கடகம்: குரு புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களின் வெளிநாடு செல்ல வேண்டுமென்ற கனவு நனவாகும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் மேம்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
தனுசு: குரு புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். வருமானத்தில் உயர்வுடன், பதவி உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் இக்காலத்தில் கையில் எடுக்கும் வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.