நடிகர் விஜயகாந்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய இலங்கை முக்கியஸ்தர்!
புரட்சிக்கலைஞரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களுக்கு நேரில் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்தின் நினைவிடத்திற்கு நேற்றைய தினம் (13.01.2024) சாணக்கியன் நேரில் சென்று வடக்கு மக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பின்னர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
விஜயகாந்த் அவர்கள் 80 மற்றும் 90 ஆண்டு காலப்பகுதியில் தமிழ் ஈழ போராட்டத்துக்கு மிக முக்கிய ஆதரவு வழங்கியவர்களில் மிக முக்கியமான ஒருவர்.
எம் மக்களுக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் எனில் அவரது ஆதரவாளர்கள் ஈழத் தமிழர்களுடன் மற்றும் ஈழ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இந்த போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.