மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வலியுறுத்திய அமெரிக்கா
ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக மாகாண தேர்தல்களை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் விக்டோரியா நுலாண்ட் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க எடுத்த நடவடிக்கையை அவர் வரவேற்றுள்ளார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மிகவும் கடினமான மற்றும் முக்கியமான தருணத்தில் தான் இலங்கைக்கு விஜயம் செய்ததாகவும் இந்த தருணத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் ஒரு துணிச்சலான நடவடிக்கை என விக்டோரியா நூலாண்ட் வர்ணித்துள்ளார்.