மாகாணசபை தேர்தல்: சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம்
அடுத்த மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து களமிறங்குவது உறுதியென்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளரும் முன்னாள் செயலாளருமான ரோஹன லக்ஷ்மன் பியதாச (Rohana Lakshman Piyadasa ) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டமொன்று கடந்த வாரம் கூடிய வேளையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதன் போது ஆராய்ந்துள்ளனர்.
எனினும் கடந்த பாராளுமன்ற அமர்வின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு (Maithripala Sirisena) எதிராக ஆளும் பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் குறித்தும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இலக்கு வைத்து தொடர்ச்சியாக தாக்கப்படுகின்ற நிலையில் கட்சியை பலப்படுத்த எடுக்க வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் ஆராயவும் அடுத்த வாரம் மீண்டும் அவரச சந்திப்பொன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அவரது கொழும்பு இல்லத்தில் கூடவுள்ளது.