வைத்தியசாலைக்கு பெருந்தொகை ரூபா அபராதம்
கம்பஹா, மல்வானை பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகத்திற்கு 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முழுமையான இரத்த பரிசோதனை அறிக்கைக்கு அதிக கட்டணம் வசூலித்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டு்ளது.
குறித்த மருத்துவ ஆய்வகம் தனது தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இரத்த பரிசோதனை
மஹர நீதவான் நீதிமன்றத்தால் நேற்று அபராதம் விதிக்கப்பட்டது.
இரத்த பரிசோதனை அறிக்கைக்கு நுகர்வோர் விவகார அதிகார சபையால் விதிக்கப்படும் அதிகபட்ச கட்டணம் 400 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத் துறையில் விலை நிர்ணய மீறல்களைக் குறி வைத்து நடந்து வரும் அமலாக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.