யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய
இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (15) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இன்றைய தினம் காலையில் சென்ற பிரதமர் , பாடசாலை அதிபருடன் கலந்துரையாடினார்.
நாளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம்
இதன்போது , பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன் , மாணவர்களுடனும் கலந்துரையாடி இருந்தார்.
யாழ்ப்பாண இந்துக்கல்லூரியை தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அதேவேளை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று மாலை , சுழிபுரம் , ஏழாலை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளுக்கு சென்று மக்கள் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார் .
மேலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நாளைய தினம் (16) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.