ஜனாதிபதியாக பதிவியேற்றவுடன் ரணில் விக்கிரமசிங்க முதலில் சென்ற இடம் !
முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பதவிப்பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து இன்று (ஜூலை 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதி ரணில் விஜயம் செய்துள்ளார்.
அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார்.
இன்று காலை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அரசாங்க நிறுவனமொன்றுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி விக்ரமசிங்க, நாட்டின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார்.
நாட்டின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர் திரான் அலஸ், சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புப் படைத் தலைவர், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர், அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.