மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஜனாதிபதி ரணில்
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று விஜயம் செய்தார்.
அதன் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன், புனரமைப்புப் பணிகளைப் பூர்த்தி செய்ய இலங்கை இராணுவத்தின் உடனடி உதவியை வழங்குமாறு இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி பணிபுரை விடுத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமங்கி இன்று மட்டக்களப்பிற்கு வியம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே சீயோன் தேவாலயத்திற்கும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.