பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அனுர அஞ்சலி
மறைந்த லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் என்.எம். பெரேரா நிலையத்திற்கு நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.
இறுதிக்கிரியைகள் இன்று
இதன்போது ஜனாதிபதி பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான காலஞ்சென்ற பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் இறுதிக்கிரியைகள் இன்று (16) பிற்பகல் 4.30 மணிக்கு பொரளை மயானத்தில் நடைபெறவுள்ளன.
நாட்டின் சிரேஷ்ட அரசியல்வாதியான பேராசிரியர் திஸ்ஸ விதாரண கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி காலமானார். நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், காலமான போது 92 வயதாகும்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக பொரளையிலுள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர் அங்கு வருகை தந்து தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.