சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தா; முதலமைச்சர் விஜய் பாராட்டு!
அமெரிக்காவில் நடந்த வரும் கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். இதன் மூலம் இந்த படத்தை பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் முதல் இரு கிளாசிக் சுற்று ஆட்டத்திலும் அமெரிக்க வீரரான ஃபேபியானோவிடம் விளையாடிய பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கியிருந்தார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிக்கை
ஆனாலும் ராபிட் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்றார். குறிப்பாக பிளிட்ஸ் சுற்றுக்களை அவர் டிரா செய்தார்.
இறுதியில் கம்பேக் கொடுத்து 15-13 என்ற புள்ளிக்கணக்கில் பிரக்ஞானந்தா சாம்பியன் படத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார்.
இதன் மூலம் அவருக்கு சுமார் ரூ.1.90 கோடி பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது. அதேவேளை பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றியை பாராட்டி தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.