வவுனியாவில் கொந்தளித்த அமைப்புகள்... இன்னுமொரு மதுபானசாலையா? ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்!
வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் புதிதாக மதுபானசாலை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இதன்படி, பூந்தோட்டம் சந்தி பகுதியில் புதிதாக மதுபானசாலை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, பூந்தோட்டம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மதுபானசாலைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் அதிகமாக ஒட்டப்பட்டுள்ளன.
கிராம மட்ட பொது அமைப்புக்கள் என உரிமை கோரி ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் 'பூந்தோட்டம் சந்தியை பிரதானமாகக் கொண்ட கிராம எல்லைகளுக்குள் மதுபானசாலைக்கான அனுமதியை வழங்காதே' என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் இன்னுமொரு மதுபானசாலை வேண்டாம் என்று குறித்த சுவரெட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.