இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தபால் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தபால் திணைக்களத்தின் பெயரில் வரும் குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்கள் ரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தபால் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை தபால் மூலம் வழங்கப்படும் பார்சலுக்கான கட்டணத்தை செலுத்துமாறு பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பி கடன் அட்டை தரவு திருட்டு மோசடி இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
இலங்கை தபால், இலங்கை தபால் திணைக்களம், SL POST, Sri Lanka Post போன்றவற்றின் பெயர்களைப் பயன்படுத்தியும் இலங்கை தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பயன்படுத்தியும் இந்த மோசடி மேற்கொள்ளப்படுகிறது.
அதற்கமைய, அட்டை தொடர்பான தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் விசாரிக்கப்படாதெனவும் அட்டை மூலம் பார்சல் தொடர்பான எந்தப் பரிவர்த்தனையையும் மேற்கொள்ளப்படாது எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பான கூடுதல் தகவல்களைக் கேட்க விரும்பினால், தபால் திணைக்களத்தின் 1950 இலக்கம் அல்லது தகவல் தொழில்நுட்பப் பிரிவின் 011 2542104, 011 2334728, 0112335978, 011 2687229, 011 2330072 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டள்ளது.