முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்
முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் வெள்ளிக்கிழமை (04.08.2023) காலை ஆரம்பமாகி நடைப்பெற்ற வண்ணம் உள்ளது.
பாரம்பரிய முறைப்படி கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு உற்சவம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணியளவில் பிரதம குருவாக திருஞானசம்பந்த குருக்கள், ஆலயபூசகர் சிவபாதன் கணேசபுவன் ஆகியோர்களால் விஷேட அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 11.30 மணியளவில் விநாயக பெருமானுக்கும் பரிவார மூர்திகளுக்கும் விஷேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்குதலும், களாஞ்சி பிரசாதம் வழங்குதலும் இடம்பெற்று பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆலய வளாகத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஆலய பூசகரால் பாரம்பரிய முறைப்படி பூசை வழிபாடுகள் இன்று மாலை கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்படும்.
பரிகலம் வழிவிடுதல் நிகழ்வு ஆரம்பித்து சனிக்கிழமை (05.08.2023) அதிகாலை 4 மணியளவில் பொங்கல் உற்சவம் இனிதே நிறைவுறும
மேலும் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து சட்ட விரோதமாக பௌத்த விகாரை அமைத்து பல்வேறு நெருக்கடிகள் வழங்கப்பட்டு வந்திருந்தது.
தற்போது குறித்த ஆலயத்தின் வழிபாடுகள் தொடர்ச்சியாக ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.