முல்லைத்தீவு பகுதியில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர்!
முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் நாடளாவிய ரீதியில் யுக்திய என்ற விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகவே புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை இன்றைய தினம் (13.03.2024) மாலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், குறித்த நடவடிக்கையில் பொலிஸார், விஷேட அதிரடி படையினர் ஆகியோர் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன் எதுவிதமான சந்தேகத்திற்கிடமான பொருட்களும் மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.