யாழில் களவாட்டபட்ட மோட்டர் சைக்கிளை மீட்ட பொலிஸார்!
யாழில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று சுன்னாகம் பொலிஸாரினால் உடுவில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (10-03-2023) நாச்சிமார் கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும், இன்று (12-03-2023) சுன்னாகம் பொலிசாரினால் உடுவில் லவ் ஒழுங்கை பகுதியில் இலக்கத் தகடு அற்றநிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதோடு மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் தப்பி ஓடியுள்ளார்.
நேற்றிரவு இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளை ஒருவர் செலுத்தி செல்வதை அவதானித்த சுன்னாக பொலிஸார், அவரை பின்தொடர்ந்து சென்றபோது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பொலிஸார் மோட்டார் சைக்கிளை போலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றநிலையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இன்று காலை சுன்னாக பொலிஸில் தனது மோட்டார் சைக்கிள் என உறுதிப்படுத்திய நிலையில் மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாண பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்படவுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் யாழ்ப்பாணத்தில் 4 திருட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.