புத்தளத்தில் பிரதேசவாசிகளை தாக்கிய பொலிஸ் உயர் அதிகாரிக்கு நேர்ந்த கதி!
புத்தளம் பகுதியொன்றில் இரு பிரதேசவாசிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள உடப்புவ பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் புத்தளம் - உடப்பு பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலின் போது, அதிகாரி மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதையும், கூடியிருந்தவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டுவதையும் நபர் ஒருவர் காணொளி எடுத்துள்ளார்.
இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் காயமடைந்த காயமடைந்த இரண்டு பிரதேசவாசிகள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சம்பவத்தில் காயமடைந்ததாகக் கூறும் குற்றப் பிரிவு OICயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று (06) காலை கைது செய்யப்பட்ட அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்தாரா இல்லையா என்பதை அறிய, குறித்த பொலிஸாரிடமிருந்து இரத்த மாதிரிகளும் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.