பெண்ணுடன் சேர்ந்து ஹெரோயின் பொதியிட்ட பொலிஸ் அதிகாரி!
தங்காலை பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் பெண்ணொருவருடன் ஹெரோயின் பொதி செய்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை வலய குற்றப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஹுங்கம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும், அம்பலாந்தோட்டை - கொக்கல பகுதியைச் சேர்ந்த 32 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 41 வயதான பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண்ணுடன் சந்தேகநபரான கான்ஸ்டபிள் தகாத உறவைப் பேணி வந்தமையும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் கைதான சந்தேக நபர்களிடமிருந்து 28 கிராம் 580 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.