யாழில் முறைப்பாடு வழங்க சென்ற பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த பொலிஸார்
யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்வதற்காக சென்ற பெண் ஒருவரை அங்கிருந்த பொலிஸார் தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியதாக தெரியவருகின்றது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்வதற்காக சென்ற பெண் ஊடகவியலாளர் சென்றுள்ளார்.
பொலிஸார் தகாத வார்த்தை
இதன்போதே அநாகரீகமாக பொலிஸார் நடந்து கொண்டதாக தெரியவருகின்றது. அதேவேளை தமிழர் பகுதிகளில் பொலிஸ் நிலையங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவது வழமை என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக தமிழ் பெண்களிடம் தமது வீரத்தை காட்டுவதும் பெரியவர் சிறியவர் என்று அல்லாமல் தரக்குறைவாக பேசுவது நடந்தேறுவதாக கூறப்படுகின்றது .
இந்நிலையில் காவல் காக்க வேண்டிய பொலிசாரே இவ்வாறு நடந்து கொண்டது கண்டனத்துக்குரிய விடயம் என்பதுடன் இது தொடர்பில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கபட்டுள்ளது.