கொழும்பில் குவிக்கப்பட்ட பொலிஸார்!
பிரதான மே தின பேரணிகள் இடம்பெறும் கொழும்பு பிரதேசத்தில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 3500 இற்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

விசேட மே தின பேரணிகள்
மே தினத்தில் நடைபெறும் அரசியல் கூட்டங்களுக்கு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
மே 1 ஆம் திகதி கொழும்பு, நுகேகொட, கண்டி, ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் விசேட மே தின பேரணிகள் மற்றும் அணிவகுப்புக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் “காவல்துறை மற்றும் அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்பாளர்கள் மே தின பேரணிகளை நடத்துவது குறித்து ஆலோசித்தனர்.”
அதன்படி, ஒரு சாலையின் ஒரு பாதையை பயன்படுத்தி , மற்ற பாதைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்துகொள்ளுமாறு அமைப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.